44வது சென்னைபுத்தகக் காட்சி 2021க்கு வரும் புது வெளியீடுகள் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் ஸ்டால் நம்பர் 10 & 11
எனது இரு நூல்களை வெளியிடும் ஜீரோ டிகிரி பப்ளிஷிங் பதிப்பகத்தருக்கு நன்றி.
44வது சென்னைபுத்தகக் காட்சி 2021க்கு வரும் புது வெளியீடுகள் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் ஸ்டால் நம்பர் 10 & 11
எனது இரு நூல்களை வெளியிடும் ஜீரோ டிகிரி பப்ளிஷிங் பதிப்பகத்தருக்கு நன்றி.
தனி மனிதன் இனம் என்னும் அடையாளங்கள்- பூமராங் நாவல்
தனிமனிதனின் அடையாளம் எதனால் நிகழ்கிறது என்று ஒருபக்கம் அலசுகிறது பூமராங் நாவல். மறுபக்கம் ஒரு இனத்துடன் ஒரு சமூகம் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ளல் மிகவும் சிக்கலானதும் வன்முறைகளுக்கு அடிப்படையானதும் ஆகும். தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றைப் பின்புலமாகக் கொண்ட இந்த நாவல் எழுப்பும் கேள்விகள் மிக அடிப்படையானவை. முக்கியமானவை வெளியிட்ட ஜூரோ டிகிரி பதிப்பகத்தாருக்கு என் நன்றி.
ஜூரோ டிகிரி பதிப்பகத்தாருக்கு ‘வாடாத நீலத் தாமரைகள்’ சிறுகதைத் தொகுதியை வெளியிட்டமைக்காக என் நெஞ்சார்ந்த நன்றிகள்.கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்கி நூலை வாங்கலாம்.
எனது குதிரை ஏறும் காதல் கவிதைத் தொகுதி, கைப்பைக்குள் கமண்டலம் கவிதைத் தொகுதி மற்றும் புது பஸ்டாண்ட் நாவல் மூன்றையும் விமர்சித்து எழுத்தாளர் மதுமிதா இரண்டு காணொளிகளை யூடியூபில் வெளியிட்டுள்ளார். அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
கார்த்திக்கின் மேஜிக் சைக்கிள்- வந்துவிட்டது. நோஷன் பிரஸ் வெளியீடாக வந்திருக்கிறது. சுவாரசியமான மாயாஜாலக் கதை. குழந்தைகள் பெற்றோர் கண்காணிப்பில்லாமல் ஸ்மார்ட்போன் பயன்படுத்தலாமா என்னும் கேள்வியை விரிவாக விவாதிக்கும் குழந்தைகள் புத்தகம் இது. நோஷன் பிரஸ்ஸில் வாங்க இணைப்பு ———————– இது.
அமேசான் கிண்டில் மின்னூலுக்கு இணைப்பு —————-இது.
நாவல் தமிழில் – அதற்கான இணைப்பு
நாவல் ஆங்கிலத்தில் – அதற்கான இணைப்பு
மேஜிக் சைக்கிளா? சைக்கிளுக்கு எப்படி மாயசக்தி வரும்? வந்தால் அது மாய சக்திகளை வைத்து என்னென்ன செய்யும்? கார்த்திக் தன் மாஜிக் சைக்கிளை வைத்துக் கொண்டு என்ன செய்தான்? விறுவிறுப்பான மாய மந்திரம் நிறைந்த இந்தக் கதையை படித்த இரு சிறுவர்கள் ‘சூப்பர்’ என்றார்கள். வாசித்துப் பாருங்கள்!
ஜீரோ டிகிரி தரும் தள்ளுபடி- புது பஸ்டாண்ட் மற்றும் பல நூல்கள்
தமது ஆங்கில மற்றும் தமிழ் நூல்கள் பலவற்றுக்கும் நல்ல தள்ளுபடியை ஜீரோடிகிரி பதிப்பகத்தார் தந்துள்ளார்கள். அவற்றுள் எனது புது பஸ்டாண்ட் நாவலுக்கான இணைப்பு —இது.
ஜென் ஒரு புரிதல் – நூல் வடிவில்
எட்டு ஆண்டுகளுக்கு முன் திண்ணை இணையதளத்தில் வெளியான ‘ஜென் ஒரு புரிதல்’ இப்போது நூல் வடிவில் வெளியாகி விட்டது. அமேசானில் மின்நூலாகவும் நோஷன் பிரஸ்ஸில் அச்சு வடிவிலும் வெளியாகி உள்ளது.
அமேசான் மின் நூலுக்கான இணைப்பு ———————– இது.
நோஷன் பிரஸ் அச்சு நூலுக்கான இணைப்பு————— இது.
ஜென் நமது மனம் அதன் எண்ணங்கள் எல்லாமே அடிப்படையில் இரவல் வாங்கப் பட்டவை என்கிறது. சுகமும் துக்கமுமாகத் தோன்றுபவை நமக்குச் சொல்லிக் கொடுக்கப் பட்ட அல்லது பாரம்பரியமாக நம் மனம் பழக்கப் படுத்தப் பட்ட மேற்பூச்சுக்களே. தன்னை உணரும் தேடலின்றி புறவயமான நோக்கில் சுகமும் துக்கமுமாய், பெருமையும் சிறுமையுமாய் அலை பாய்ந்து ஒரு ஊடாடும் வெறுமையைச் சுமக்கிறது மானுடம்.
காலம் காலமாக ஜென் இந்த வெறுமையை எப்படி எதிர் கொண்டது என்பதை ஜென் மரபுச் சிந்தனையாளரின் கவிதைகள் சுட்டுகின்றன. ஜென் வழி ஆன்மீகத் தேடலை புரிந்து கொள்ள ஜென் கவிதைகள் நூற்றாண்டுகாலத் தொடர்ச்சியுடன் வழிகோலுகின்றன. கால வரிசைப்படி இக்கவிதைகளையும் ஜென் கவிஞர்களையும் இக்கட்டுரைத் தொடரின் வாயிலாகத் தரிசிப்போம்.
‘வாசிப்போம் – தமிழ் இலக்கியம் வளர்ப்போம்’ முகநூல்குழு தமிழ் இலக்கியத்துக்குத் தேவையான ஒரு அரிய பணியை செய்து வருகிறார்கள். நூல்களை வாசித்து விமர்சிக்கும் பணியே அது. பத்தாண்டு முன்னால் வெங்கட் சுவாமிநாதன் நிறையவே செய்து வந்தவர். அதன் பின்னர் சரவணன் மாணிக்கவாசகம் ஒரு அசுர வாசகர். கடுமையாய் வாசித்துக் கொண்டே இருப்பார். வாசித்தவற்றை விமர்சிப்பார். அவரும் இந்தக் குழுவில் இருக்கிறார். மந்திர மூர்த்தி அழுகுதான் குழுவை மேலாண்மை செய்து நடத்தி வருபவர். வாசிப்பில் சிறந்தவருக்கு மாதாமாதம் புத்தகங்கள் பரிசு. தன்னார்வலராக படைப்பாளிகள் தரலாம். இப்படியாக ஒரு முறையான ஒரு அமைப்பு உருவாகி இயங்கி வருவது மிகுந்த பொறுப்பையும் உழைப்பையும் கோருவது. மந்திரமூர்த்திக்கு என் பாராட்டுக்கள்.
அவர் தாடங்கம் சிறுகதைத் தொகுதியை விமர்சித்து எழுதி இருக்கும் கட்டுரைக்கான இணைப்பு — இது.
அவருக்கு என் மனமார்ந்த நன்றி.
நோஷன் பிரஸ் வெளியீடாக ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி அச்சு வடிவில் வெளியானது. அதை ஆன்லைனில் தருவிக்க இணைப்பு —————— இது.