http://puthu.thinnai.com/?p=9354
அரசியல் சமூகம்
ஜென் ஒரு புரிதல்- பகுதி 34
சத்யானந்தன்
“டைஜன் ரோஷி” என்னும் ஜென் ஆசான் பற்றி ஏற்கனவே பார்த்தோம். அவர் அமெரிக்காவில் “ஜென் சென்டர் ஆஃப் லாஸ் ஏஞ்சலிஸ்” என்னும் ஜென் பள்ளியை ஸ்தாபித்தார். அந்தஅமைப்பைச் சேர்ந்த “அர்விஸ் ஜொயன் ஜஸ்டி” அவரின் சீடர்களுள் ஒருவராவார். அர்விஸின் சீடர் “அட்யா ஷாந்தி”. பிறப்பால் அமெரிக்கரான அட்யா ஷாந்திக்கு தற்போது ஐம்பது வயதாகிறது. சமகாலத்தில் ஒரு சிறந்த ஜென் சிந்தனையாளராகக் கருதப் படுபவர். இவரது “ஓய்வுறு எடுத்துக் கொள்ளப் படு” என்னும் கவிதையை வாசிப்போம்.
ஓய்வுறு எடுத்துக் கொள்ளப் படு
________________________
ஆழ்ந்த பொருட் செழிப்பு
இருக்கும் போது
சகிப்புத் தன்மை காட்ட வேண்டிய
இடம் என்று ஒன்று இருக்காது
ஓய்வெடுக்கவோ பற்றிக் கொள்ளவோ
இடம் ஏதும் இல்லை
இருந்தாலும் ஓய்வு இருக்கிறது
வானம் சகித்துக் கொள்கிறது
ஆனாலும் அது ஓய்வெடுப்பதே இல்லை.
அதே சமயம் எது எப்போதுமே
ஒய்வெடுப்பதில்லை என்று நாம் கூற இயலாது
வானத்துக்கு என்று ஒரு வடிவம் இருப்பது போலவும்
நிஜத்திலேயே அது இருப்பது போலவும்
நாம் பேசிக் கொள்கிறோம்
அதே சமயம் வானம் இல்லை என்றும்
நாம் கூற முடியாது
வானம் என்பது என்ன?
வருவதும் போவதும் தான்
எல்லாமே தன்வயமானது
வருவதும் போவதும் பரஸ்பரமாய்த் தொடங்குகிறது
உடனுக்குடனாக நிகழ்கிறது
உண்மையான நான் உறக்கத்திலிருந்தால்
நீ இதை கவனிக்கத் தவறுவாய்
எதிர்மறைகளின் உலகிலேயே
தொடர்ந்து வசித்து விடுவாய்
எனவே இரண்டை ஒன்றாகக் காண்
ஒன்றை காலியானாதாக
இருமைகளின் உலகத்துக்குள்ளே
விடுதலை பெற்றவனாக இரு
ஒன்றாக மாறியதைத் தொடர்ந்து
அதற்கும் முன்னான
மாற்றத்திற்கும் பின்னால்
செல்வதே நிகழ்கிறது எனத் தோன்றும்
முதலில்
நெருங்கி நோக்கினால்
மின்னல் கீற்றுகளே
காலி வானத்திற்கு ஒளியூட்டுவது
தெரியும்
வாழ்க்கை மரணம்
மாற்றம் முரண்மாற்றம்
இவை வெற்றுச் சொற்கள்
நொடிக்கு நொடி
தருணத்திற்குத் தருணம்
நீ மரிப்பதை உறுதி செய்ய வேண்டும்
உயிர் வாழ்வதற்கு
இப்போது நீ எங்கே அடங்கி சகித்திருக்கிறாய்?
எங்கே அடங்காது இருக்கிறாய்?
உண்மையில் உன் தலையைச் சாய்த்து ஓய்வு எடுக்க
இடம் ஏதுமில்லை
அதே சமயம் ஓய்வைத் தவிர வேறு ஏதுமில்லை
எனவே நிரந்தரம் மற்றும் நிரந்தரமின்மை
பற்றிய கருத்துக்களைக் கைவிடு
காரணம் விளைவு பற்றியதையும்
காரணமற்றவை விளைவற்றவை பற்றியுந்தான்
இந்தக் கருத்துக்கள் யாவுமே இருமைக் கோட்பாடுகள்
நீ யார் என்னும் உண்மை
முற்றிலும் இருமைகளுக்கு அப்பாற்பட்டது
இருமையின்மை பற்றிய கருத்துக்களுக்கும் தான்
இருப்பினும் அதனுள் இருமையும் இருமையின்மையும்
இரண்டுமே அடங்கும்
அது ஒரு சாகரம் போன்றது
அலைகள் அசைவில்லா ஆழ் கடல் இரண்டுமாய்
அதே சமயம் அதை அலைகள் என்றோ
அசைவற்றது என்றோ விளக்க முடியாது
இருப்பின் உண்மையை
யோசனைகளாலும் அனுபவங்களாலும்
வசப்படுத்த இயலாது
அலைபாய்வதும் அமைதியும்
இரண்டுமே
வெளிப்படுத்தும் நடவடிக்கைகளே
அல்லது நீயே
ஆனால் சுயம் என்பதை
செயல் அல்லது
செயலின்மையைக் கொண்டு
விளக்க இயலாது
உண்மையோ
அனைத்தையும் கடந்ததாய்
வசப்படாததாய்
அனைத்தையும் உள்ளடக்கியதாய்
உன் தோலை விட நெருங்கியதாய்
அதைப் பற்றிய ஒற்றைச் சிந்தனை கூட
அதன் சாராம்சத்தை சிதற அடித்து விடும்
உண்மையான வாழ்க்கையின் வாசனைத் திரவம்
உன் மூக்கிலேயே இருக்கிறது
நீ என்ன செய்தும் அதைக்
காண இயலாது
அதே சமயம் நீ ஏதேனும் செய்தே
தீர வேண்டும்
நான் சொல்வது:
ஓய்வுறு எடுத்துக் கொள்ளப் படு
ஓய்வுறு எடுத்துக் கொள்ளப் படு