(7.12.2014 ‘திண்ணை’ இணைய இதழில் வெளியானது)
நகை முரண்
சத்யானந்தன்
ஊழலை ஒழிக்க
விழைகிறவர் எப்போதும்
அதிகாரத்தில் இல்லாதோர்
பெண்ணுரிமை பேசுவோர்
அனேகமாய் ஆண்கள்
கல்விச் சீர்திருத்தம்
யார் வேண்டுமானாலும் பேசுவர்
மாணவர் தவிர
நதிநீர் பங்கு கேட்டுப்
போராடும் யாரும் கேட்பதில்லை
நதிநீர்த் தூய்மை
அணு மின்சார அனல் மின்சார
எதிர்ப்பாளர் வீட்டில் இல்லை
சூரிய மின்சாரம்
வாசிப்புக் குறைந்தது
கவலை தருகிறது
எழுத்தாளருக்கு மட்டும்
ஒரே கூரையின் கீழ்
செய்தி பரிமாறுவர் ஒருவருக்கொருவர்
உலகின் மூலையிலுள்ள ஒரு
கணினி மூலம்
(image courtesy:canstockphotos.com)