திருச்சியில் 26 ஆண்டுகளாக அரசு மருத்துவமனையில் தொடரும் ‘அகத்தியர் அன்னதானம்’- காணொளி
கோவிந்தராஜ் என்னும் நல்ல இதயத்தால், 26 ஆண்டுகளுக்கு முன்பு எளிமையாகத் தொடங்கப் பட்ட, பொது மருத்துவமனை நோயாளிகளுக்கு வென்னீர் மற்றும் உணவு வழங்கும் தர்ம காரியத்தை அவரது மகனான ரவீந்திர குமார், குடும்பத்தினர் மற்றும் தன்னார்வலர்கள் தொடர்கிறார்கள் என்பது திருச்சிக்காரனான எனக்கே இந்தக் காணொளியைக் கண்ட பின்பே தெரியும். அவர்கள் பணியை வணங்குகிறேன். பாராட்டுகிறேன்.
அவர்களது இணைய தளத்துக்கான இணைப்பு ———- இது.
பகிர்ந்த நண்பருக்கு நன்றி.