வாங்க வம்பளப்போம் – வைரமுத்து சர்ச்சை பற்றி ஜெயமோகன்
ஆண்டாள் இந்தக் குலத்தவர் என ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை வைர முத்து கூறி இருப்பதும், தமிழ் நாட்டுக்கே உரிய முறையில், உருவப்பட்ட எரிப்பு, ‘ உன்னை மறியல் செய்வேன் ‘ என்னும் மிரட்டல் எல்லாம் துவங்கி விட்டன. ஜெயமோகனின் கருத்து பற்றி வம்பு இல்லை. வம்பு வைரமுத்து மற்றும் பெருமாள் முருகன் பற்றியது .
முதலில் ஜெயமோகனின் பதிவை வாசியுங்கள். இணைப்பு ————————— இது.
ஜெயமோகனின் கருத்து சுருக்கமாக இது தான். பக்தி காலத்து இலக்கியங்களை, சம காலத்தில் இருக்கும் மலினமான , காமம் – உடலிச்சை என்னும் அணுகுமுறையில் பார்த்துக் கொச்சைப் படுத்துவதில் வைர முத்துவும் தன் பங்களிப்பை செய்திருக்கிறார்.
நான் வம்பளப்பதெல்லாம் இது தான். வைர முத்து எப்போது ஆராய்ச்சியாளராக மாறினார் ? அதிக ஆதாரம் இல்லாத காலகட்டம் பற்றி நாம் பேசும் போது , எல்லாமே யூகங்கள், எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் சேர்த்தே சொல்ல வேண்டும். ஆண்டாளின் கவிதையை காணாமல் அவரது ஜாதி பற்றிப் பேசும் தராதரம் வைரமுத்து உடையது என்பது நமக்குத் தெரிந்ததே. தமிழில் ஊர்வசி.. ‘டேக் இட் ஈஸி ‘ என்று சினிமாக் கவிதையை ஒரு படி மேலே கொண்டு போனதும் அவர்தான்.
அரைத்த மாவையே அரைத்து பிழைப்பை ஒரு வர்ணனைக் பாட்டெழுதும் திறமைசாலி. அவ்வளவே. அது அவர் தொழில். பிழைப்பு. அதே போல் கருத்துச் சுதந்திரம் அவருக்கு உண்டு. அதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் அவர் ஆதாரங்களோ, கல் வெட்டுக்களோ இல்லை. என்று சேர்த்து சொல்லி இருக்க வேண்டும். அவர் மன்னிப்புக் கேட்பதால் அல்லது சொன்னதால் ஆண்டாளின் கவித்துவமும் பக்தியும் மாசு படப் போவதோ, புனிதம் அடையப் போவதோ இல்லை.
பெருமாள் முருகன் முழுக்க முழுக்கக் கற்பனைக் கதையை எழுதியிருந்தார். திறமை போதாது. நுட்பமாகக் கூறாமல் அசட்டுத்தனமாக எழுதி அல்லல் பட்டார். அவரையோ வைரமுத்துவையோ மிரட்டுவது, தெருவுக்கு அழைப்பது கருத்துச் சுதந்திரத்துக்கு முற்றிலும் எதிரானது. மாற்றுக் கருத்தே இல்லை.
அவர்கள் எந்த ஊடகத்தில் கூறினார்களோ அதே ஊடகத்தில் நாம் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். கட்டுரை ஒன்று அவர் எழுதினால் நீங்கள் நூறு கட்டுரை எழுதுங்கள். தெருவில் நூறு பேர் நின்று மிரட்டாதீர்கள். ஆனால் திமுக மற்றும் அதன் அடிவருடிகள் இதைச் செய்தார்களோ என்று என்னைக் கேட்காதீர்கள். அவர்கள் தம் எதிர்ப்பை எப்படிக் காட்டினார்கள் என்றெல்லாம் ஆராயாதீர்கள்.
(image courtesy: apnisamskrit.com)
If I post my response, will you allow it? Because earlier you have blocked mine. If you say yes, I shall.
Pl friend pl post your comments