இங்கிலாந்து வாழ் தமிழ்க் குழந்தையின் அழகு தமிழ்- காணொளி
பல சந்தர்ப்பங்களில் நாம் தாய் மொழி தமிழாகக் கொண்ட குழந்தைகள் , ஆங்கிலத்திலோ அல்லது ஆங்கிலம் கலந்த தமிழிலோ பேசுவதையே பார்க்கிறோம். இது சமகாலப் பெரியவர்களுக்கும் பொருந்தும். மூன்று வயதில் கவிதை எழுதி ‘கின்னஸ் ‘ சாதனையாளராயிருக்கும் இந்தக் குழந்தையின் பெயர் அனன்யா என்று மட்டும் அவர் பேசும் போது தெரிந்து கொள்கிறோம். அவர் இணையத்தில் தம்மைப் பற்றி பகிர்ந்து கொண்டாரா என்று தெரியவில்லை. அவர் பற்றிய மேல் விவரம் தெரிந்தவர்கள் என்னுடன் பகிருங்கள்.
திரைப்படங்களில் நல்ல தமிழ் பேசுவது நகைச்சுவைக் காட்சியில் மட்டுமே வரும். இப்போது இந்தக் குழந்தை பேசுவது நமக்கு எவ்வளவு மகிழ்ச்சி தருகிறது. மொழி வெறி கூடாது. ஆனால் நம் தாய் மொழியை நாமும் நம் பின் வரும் தலைமுறையும் மதிக்க வேண்டும். பிழையின்றி எழுத வேண்டும் பேச வேண்டும்.
பகிர்ந்த வாட்ஸ் அப் நண்பருக்கு நன்றி.